காஞ்சிபுரத்தில் இளைஞரை துடிக்க துடிக்க 6 பேர் கொண்ட கும்பல் செய்த வெறிச்செயல்! மக்கள் நெரிசலான பகுதியில் பரபரப்பு!
murder in Kanchipuram
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருப்பதி குன்றம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்.இவர் காஞ்சிபுரம் மண்டித் தெருவில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார். இன்று மாலை 6 மணி அளவில் அவருடைய பைனான்ஸ் கடையில் இருந்தபொழுது ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கருணாகரனை தாக்கியுள்ளார்கள்.
இதில் படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது அவர் கடையில் உடனிருந்த விக்கி என்பவர் படுகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் அதுவும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொலை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
காஞ்சிபுரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபல தாதா ஸ்ரீதர், கம்போடியாவில் மறைந்த பின் அவரிடம் இருந்தவர்கள், இரண்டு கோஷ்டியாக பிரிந்து போட்டி நிலவி வருகிறது. அதில் ஸ்ரீதரின் சொந்தக்காரர் தணிகா என்பவர் ஒரு கோஷ்டியாகவும். ஸ்ரீதரின் டிரைவராக பணிபுரிந்த தினேஷ் ஒரு கோஷ்டியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் கடந்த மாதம் 28ம் தேதி தணிகா கோஷ்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பர் ஓடும் பேருந்தில் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக சதீஷ்குமார் கொலைக்கு உறுதுணையாக இருந்த தினேஷ்க்கு நெருங்கிய நபரான ஸ்ரீதரின் சித்தப்பா மகன் கருணாகரனை தினேஷ் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.