எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
MR Vijayabaskar Conditional bail
கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணைக்கு தேவைபடும் போது நேரில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
English Summary
MR Vijayabaskar Conditional bail