மூன்றாம் கட்ட தேர்தல் - தமிழகத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு..!
leave with salry to employs for third round election
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது.
இதனால், தேர்தல் நாட்களில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தொழிலாளர் இணை ஆணையர், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் தே.விமலநாதனை 944539880, 044-24335107 உள்ளிட்ட எண்களிலும், உதவி ஆணையர் சென்னை முதல் வட்டம் எம். வெங்கடாச்சலபதியை 7010275131, 044-24330354 உள்ளிட்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.
English Summary
leave with salry to employs for third round election