''இந்துக்களுக்கு எதுவும் செய்யவில்லை'' பா.ஜனதாவை தாக்கும் எம்.பி. கனிமொழி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். 

இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் பாராளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியபோது, 

''இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஜாதி மதத்தை மறந்து விட்டு சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவி கரம் நீட்டி வாழ்கிறோம். 

ஆனால் பாஜக அரசு, இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்து மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள். பா ஜனதா விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. 

அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறது. இதனால் மீண்டும் பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். அனைவரையும் மதத்தை வைத்து பிரித்து விடுவார்கள். 

நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களை அர்ச்சகராகலாம் என்ற ஆணையிட்டு செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் முதலமைச்சருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP kanimozhi heavy attack bjp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->