ஈரோட்டில் மொபட் மீது லாரி மோதி விபத்து.! பெண் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி.

இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் மொபட்டில் அழைத்து சென்றுள்ளார். பின்பு சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு சத்தி மெயின் ரோட்டில் திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபெட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ராஜேஸ்வரி மற்றும் சண்முகம் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped lorry accident in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->