கடலூரில் பிரச்சாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க. வேட்பாளர் துரை. ரவிக்குமார் உள்ளிட்டோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பேசினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். இதைத் தொடர்ந்து மதிய வேளையில் முக்கிய நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரமுகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க. வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். அதன் பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin election campaighn in cuddalore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->