அனல் பறக்கும் பிரச்சாரம் - சேலத்தில் மோடியை சாடிய உதயநிதி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் இளைஞர் நல்வாழ்வுத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

அதன் படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- "திமுகவிற்கு போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு. 

ஒவ்வொரு இயற்கை பேரழிவு தமிழகத்தில் நடைபெற்ற போதும் பிரதமர் மோடி கைகட்டி வேடிக்கை பார்த்தார். தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speech in salem election campaighn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->