''இந்தியா கூட்டணி வெல்லும் வரை அயராது உழைப்போம்'' அமைச்சர் உதயநிதி பதிவு!  - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய எதிர்காலத்தை தீர்மானிக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கழக பாராளுமன்ற தேர்தல் மேற்பார்வை ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

தொகுதி நிலவரம், தேர்தல் முன்னேற்பாடு பணிகள், கழக அரசின் திட்ட நிலை போன்றவற்றை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தோம். 

வெறுப்பையும் வேற்றுமையையும் விதைக்கும் பாசிஸ்டுகளை விரட்ட இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம் என கேட்டுக்கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Udayanidhi Stalin tweet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->