அரையாண்டுத் தேர்வு பதட்டம் துயரமானது! 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட காரணம் என்ன...?
Mid year exam anxiety tragic What reason why 10th grade student committed suicide
கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்த 15 வயது ஹரிபிரசாத், கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
தொடர்ந்தும் பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வந்த அவர், இன்று நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுக்காக நேற்று வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், தேர்வில் மேலும் சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என பெற்றோர் வற்புறுத்தியதாக தகவல். இதனால் மனமுடைந்த ஹரிபிரசாத், வீட்டின் சமையலறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10ம் வகுப்பு மாணவனின் தற்கொலை, அந்தப் பகுதியில் பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mid year exam anxiety tragic What reason why 10th grade student committed suicide