பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம்: தமிழக அரசு ஒப்புதல்..!
Metro rail project for Poonamallee to ParanthurTamil Nadu government approves
பரந்தூரில் புதிய விமான நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட பரந்தூர் விமான நிலையம் மற்றும் திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தவகையில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை சுமார் 52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Metro rail project for Poonamallee to ParanthurTamil Nadu government approves