"பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஹெல்ப்லைன்": முதல்வர் விஜய்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசர வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் மற்றும் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரவிமோகன் தனது குடும்பப் பிரச்சினை குறித்துக் கண்ணீருடன் அளித்த பேட்டி தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களைப் பாதுகாக்கத் தனி ஹெல்ப்லைன் (Helpline) அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவசரக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான அருள் துமிலனின் அந்த மனுவில், "நடிகர் ரவிமோகனின் கண்ணீர் பேட்டி தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கும், அவரைப் போலப் பாதிக்கப்படும் அனைத்து ஆண்களுக்கும் எங்கள் சங்கம் அனைத்து விதத்திலும் உறுதியாகத் துணை நிற்கும். தனது குழந்தைகளைப் பார்க்கக்கூட விடவில்லை என்று அவர் கூறியபோது, 'குழந்தைகளைப் பொருளாதார ரீதியாகப் பராமரிப்பது மட்டுமே தந்தையின் பொறுப்பு' என ரவிமோகனின் மனைவி தரப்பு கூறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் தற்கொலை - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்:

மனுவில், பெண்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் மறைமுகக் குடும்ப வன்முறைகள் மற்றும் தற்கொலைகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

அதிகரிக்கும் கொடுமைகள்: உடல் ரீதியான வன்முறை மட்டுமின்றி, மன ரீதியான துன்புறுத்தல், பொருளாதாரக் கட்டுப்பாடு, சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் பெற்ற குழந்தைகளைப் பார்க்கத் தடை விதிப்பது போன்ற வழிகளில் ஆண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

NCRB புள்ளிவிவரம்: கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 10,000 குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது. இதில் 38.4% தற்கொலைகளுக்குக் 'குடும்பப் பிரச்சினைகளே' முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய உதாரணங்கள்: கன்னியாகுமரி அகஸ்டின் ஜோசப், சென்னை நெற்குன்றம் மணிகண்டன், நெல்லை சுதாகர், தருமபுரி தினேஷ் ஆகியோர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் வன்கொடுமை தாளாமல், அதனை வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சமீபகால உதாரணங்கள் ஆவர்.

முன்னோடித் திட்டமாக ஹெல்ப்லைன் தேவை:

பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பெண்களால் வன்முறைக்கு ஆளாகும் ஆண்களைப் பாதுகாக்கத் தனி ஹெல்ப்லைன் தொலைபேசி வசதிகள் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள வக்கீல் அருள் துமிலன், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டில் அத்தகைய பிரத்யேக உதவி எண்களை முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது பல்லாயிரக்கணக்கான ஆண்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mens Protection Association Urges CM Vijay After Actor Ravimohans Tearful Interview


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->