தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நாளை 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து நாளை ஜூலை 24ஆம் தேதி தமிழக முழுவதும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியை செய்ய உள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mega vaccination camp tomorrow in Tamil Nadu Minister M. Subramanian announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->