மருத்துவ கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்ப்பு!  - Seithipunal
Seithipunal


மருத்துவ கல்லூரி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா அம்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மருத்துவ கல்லூரி மாணவி, மகாலட்சுமி தனது  பெற்றோருடன் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் வசித்து வந்தார். இவர் சென்னப்பட்டணாவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

இந்தநிலையில் தினமும் வீட்டில் இருந்துதான் கல்லூரிக்கு சென்று வந்த மருத்துவ கல்லூரி மாணவி,மகாலட்சுமி  நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின்  பெற்றோர் கல்லூரியில் விசாரித்தபோது மகாலட்சுமி நேற்று முன்தினம் மதியமே வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறினர்.

இதனால் பதறிப்போன பெற்றோர்  இதுபற்றி அக்கூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமியை தேடினர். இந்த நிலையில் நேற்று காலை நிங்கராஜ்புரம் ஏரியில் மகாலட்சுமி பிணமாக மிதந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதனை தொடர்ந்து  தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்த போலீசார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை என்பதால், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical college student drowned in the lake


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->