வேலூர் : தண்டவாளத்தை கடக்க முயன்ற மெக்கானிக்.. ரயில் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மெக்கானிக் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் வஞ்சூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் மெக்கானிக் ஆனந்தன்(27). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்பொழுது அரக்கோணத்தில் இருந்து வந்த மின்சார ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக ஆனந்தன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mechanic killed in train collision in Vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->