தமிழ்நாட்டில் "MBBS கலந்தாய்வு" எப்போது? அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் கீழ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். 

அதேபோன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து  நடப்பு கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்து 5 நாட்கள் கழித்து நடைபெறும் என தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான அதிகாரப்பூர்வ கலந்தாய்வு தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS Counseling in Tamilnadu from 25th July


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->