#மயிலாடுதுறை | டாஸ்மாக் பாரில் தகராறு., கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்.!
mayiladuthurai pajanai street young man murder
மயிலாடுதுறையில் டாஸ்மார்க் பாரில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் இயங்கி வரும் டாஸ்மாக் பார் ஒன்றில், மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கீழநாஞ்சில்நாடு வடக்கு தெருவை சேர்ந்த ஜீவானந்தம், கோவில் திருவிழாவை முன்னிட்டு, பஜனை மடம் சந்தில் உள்ள டாஸ்மாக் பாரில் நள்ளிரவு மது வாங்க சென்றுள்ளார்.
அப்போது அதிக விலையில் மது வகைகளை விற்பனை செய்த தமிழ்மணி என்பவரிடம், மொத்தமாக மது வகைகளை வாங்குவதால் விலை சற்றே குறைக்குமாறு தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்மணி முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கவே, ஜீவானந்தம் தனது நண்பர்களை அழைத்து வந்து தமிழ்மணி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழ்மணி ஜீவானந்தத்தை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜீவானந்தம் துடிதுடித்து உயிரிழந்தார்.
டாஸ்மார்க் கடைகள் 10 மணிக்கு மூடப்பட்டாலும் மயிலாடுதுறையில் இரவு முழுவதும் பிளாக்கில் (கள்ளச்சந்தையில்) மது விற்பனை விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.
English Summary
mayiladuthurai pajanai street young man murder