மே 13: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம்; தமிழக அரசு அறிவிப்பு..!
May 13 Auction of bonds worth Rs 2000 crore Tamil Nadu government announcement
ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மே 13-ந்தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) மே 13-ந்தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
May 13 Auction of bonds worth Rs 2000 crore Tamil Nadu government announcement