#குமரி || பல வருட காதல், கணவனுடன் சண்டை, திருமணம் முடிந்து 8 மாதத்தில் இளம்பெண் எடுத்த முடிவு.! - Seithipunal
Seithipunal


அருமனை அருகே திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன். 28 வயதாகும் இவரும், பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த அனிஷா என்ற (26 வயது) பட்டதாரி பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவருமே தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்பு காதல் ஜோடியான தம்பதிகளுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அனிஷா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை சாஜன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, தனியாக இருந்த அனுஷா அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அனுஷாவின் மாமியார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அனுஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து எட்டு மாதங்கள் ஆன பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் மரணம் குறித்து பத்மநாபபுரம் ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MATHTHUR KONAM YOUNG WOMEN SUICIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->