ஏர் இந்தியா விமானத்தில் பெண்மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி.!  - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஜேஎப்கே விமானத்தில் வணிக வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, "ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வரும்போது பயணி ஒரு போதையில் சிறுநீர் கழித்ததால் பை, காலணிகள் மற்றும் உடைகள் அனைத்தும் நனைந்திருந்தன. அதன் பின்னர் அங்கு எனக்கு பை மற்றும் செருப்புகள் வழங்கி பிறகு இருக்கைக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டனர்.

அந்த விமானத்தில் பல முதல் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்தபோதிலும், ஒரு குழு இருக்கையில் பயணிக்க வேண்டியிருந்தது. விமானம் தரையிறங்கிய பிறகு அந்த நபரை சுதந்திரமாக நடமாட விமான குழுவினர் அனுமதித்துள்ளனர்" என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஒரு குழுவை அமைத்து, அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாத தடைக்கு பரிந்துரை செய்தது. தற்போது, இந்த விவகாரம் அரசு ஆய்வு குழுவிடம் உள்ளது. 

இந்தக் குழுவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man urinated on woman in air india


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->