உன் திருமணத்தை நிறுத்திவிடுவேன்., புதிய பாணியில் பணம் பறிக்க திட்டம் தீட்டிய பலே கில்லாடி கைது.!
man threaten call for money
சென்னை அருகே நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விடுவதாக கூறி, இளம் பெண்ணிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மண்ணடியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், 'தனக்கு பத்து லட்சம் தராவிட்டால் உனது திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவேன்' என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மற்றும் அந்த இளம் பெண்ணின் தாயார், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த மிரட்டல் குறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டிவர் ஒரு பொதுத் தொலைபேசி பூத்திலிருந்து பேசியது முதல் கட்டமாக தெரியவந்தது. இதனையடுத்து அந்த தொலைபேசி நிலையம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய அந்த ஆய்வில், இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த நபர் பாரிமுனை, பிடாரியார் கோயில் தெருவை சேர்ந்த பாலுசாமி (வயது 40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, பாரிமுனை அருகே நேற்று பாலசாமியை போலீசார் கைது செய்தனர். பாலசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பதை கேள்விப்பட்டு, அவரின் நடத்தை சரியில்லை என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்துவிடுவதாக, அந்த இளம்பெண்ணை மிரட்டினால் எனக்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில், யாரும் என்னை அடையாளம் காண முடியாத பொது தொலைபேசி பூத்தில் இருந்து மிரட்டல் விடுத்தேன்" என்று பாலுசாமி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
man threaten call for money