திண்டுக்கல் : மதுபோதையில் ஆம்புலன்ஸை மறித்து ரகளை செய்த வாலிபர்.!
man stop ambulance with drunken in dindukal
திண்டுக்கல் : மதுபோதையில் ஆம்புலன்ஸை மறித்து ரகளை செய்த வாலிபர்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் நிற்க முடியாத அளவிற்கு போதையில் தள்ளாடிய படி அங்கும், இங்கும் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த நபர் அப்பகுதியாக வந்த ஆம்புலன்ஸ், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதியவர் ஒருவர் மட்டும் தைரியமாக ரகளையில் ஈடுபட்ட இளைஞரை துணிந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது தகாத வார்த்தைகளால் பேசியதால் பொதுமக்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் காவல் துறையினருடன் செல்லும் போதும் கூட தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த
பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த தாராபுரத்தை சேர்ந்த ராஜா என்பதும் வேலை செய்விட்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் ராஜாவை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
man stop ambulance with drunken in dindukal