கும்பகோணம்! இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அருகே இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பாலத்திற்கு சுமார் 10 அடியில் வாய்க்கால் தோண்டப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சாலை விரிவாக்கப் பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைப்புகள் இல்லாமல் பணி செய்வதே இத்தகைய விபத்து ஏற்பட காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man dies after falling into abyss with twowheeler


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->