நள்ளிரவில் பயங்கரம்.. மெத்தை தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு.!!
Man died in midnight bed fire accident in Chennai
இரவு நேரத்தில் சிகரெட் பிடித்து அணைக்காமல் மெத்தையின் மீது போட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த வேளச்சேரி ராஜலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் நேற்று இரவு சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் தனது மெத்தையின் மீது போட்டு உள்ளார்.
இதனால் கோவிந்தன் படுத்திருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் மெத்தையின் மீது உறங்கிக் கொண்டிருந்த கோவிந்தன் மீதும் தீப்பற்றியுள்ளது இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Man died in midnight bed fire accident in Chennai