கோவை : மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


கோவை : மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அடுத்த காரமடைப் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், வீட்டை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது அவர் ஈரமான கையுடன் டிவி செட்டாப் பாக்ஸைத் துடைக்க முயன்றுள்ளார். அதிலிருந்து திடீரென மின்சாரம் தாக்கப்பட்டு அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் முனியப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முனியப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for electric shock attack in covai


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->