நிலதகராறு.. சகோதரியை ஓட ஓட வெட்டிய சம்பவம்.. அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..!
Man attempt Murder his sister Near vizhuppuram
நிலதகராற்றில் சகோதரியை ஓட ஓட வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ஆயத்தூரை சேர்ந்தவர் ராஜசுலோச்சனா. இவருக்கும் இவரது சகோதரர் ஹரிகிருஷ்ணனுக்கும் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு இடையே உள்ள ஓடையில் மண் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று ராஜசுலோச்சனாவின் கணவன் மற்றும் மகனுடன் ஆகியோருடன் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்படுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ராஜசுலோச்சனாவையும் அவரது கணவரையும் பட்டாகத்தியல வெட்ட துரத்தியுள்ளார். அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். அங்கிருந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துரையினர் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man attempt Murder his sister Near vizhuppuram