திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளகாதலி மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது..!
Man arrested Who involved in Acid attack
கள்ளகாதலி மீது ஆசிட் வீசிய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு சேலை வியாபாரியான செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி இருவரும் ஒரே வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், முத்துலட்சுமி செல்வத்தைப் திருமணம் செய்து கொள்ள வேண்டி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த ஆசிட்டை அவர் மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வந்த நிலையில் ஐதராபாத்தில் தங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கள்ளகாதலி மீது ஆசிட் வீசிய சம்பவம் .பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man arrested Who involved in Acid attack