கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவி.! தேடி சென்று சரக்கு பாட்டிலால் தாக்கிய கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பல்லவன் சாலை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன்-சுரேகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சுரேகா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சுரேகா வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த குணசீலன்,அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குணசீலன் தான் மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் பீர்பாட்டிலால் சுரேகாவை தாக்கியுள்ளார்.

இதனால், கதறி அழுத சுரேகாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் குணசீலன் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். இதையடுத்து பொதுமக்கள் சுரேகாவை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி, போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குணசீலனை கைது செய்தார். தான் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிந்த குணசீலன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack wife in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->