முன் விரோதத்தால் நண்பரை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது.! - Seithipunal
Seithipunal


முன் விரோதத்தால் நண்பரை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி. இவர் ஓசூரில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதபுதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். 

நண்பர்களான இவர்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அன்புமணி கடந்த 28-ந் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார். 

அப்போது, அங்கு வந்த செல்வகுமாருக்கும், அன்புமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அன்புமணியை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அன்புமணியை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அன்புமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack co employee in osoor


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->