சென்னை : போரூர் ஏரியில் அடையாளம் மிதந்த ஆண் பிணம்.. கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை..!
Male body found floating in Porur Lake
ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு உதவியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இறந்த நபருக்கு 50 வயது இருக்கும் எனவும் அவர் கோயிலுக்கு மாலை அணிந்து உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்..
குளிக்க வரும் போது தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
Male body found floating in Porur Lake