கள்ளக்காதல்: அமமுக பிரமுகரை.. துள்ளத்துடிக்க கொன்ற மனைவி.. கல்லை போட்டு, வெந்நீர் ஊற்றி.. அரிவாளால் வெட்டி.. பயங்கரம்.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சர்க்கரை என்ற 51 வயது நபர் தனக்கன்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் அமமுகவின் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சக்கரைக்கு 48 வயதில் அன்னலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்  

கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சர்க்கரையின் தலையில் ஒரு பெரிய கல்லை எடுத்து போட்டு அன்னலட்சுமி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மேலும் ஏற்கனவே சுட வைத்திருந்த கொதி நீரை எடுத்து அவர் உடல் முழுவதும் ஊற்றி இருக்கிறார்.

இதனால் வலி தாங்காமல் சர்க்கரை அலறி அடிக்க தொடர்ந்து வெறி தீராத அன்னலட்சுமி அவரை அறிவாளால் வெட்டி இருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் சர்க்கரைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு மகன்கள் வீட்டிற்குள் இருந்து வெளியில் எழுந்து வர அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து குத்துயிரும், கொலை உயிருமாக கிடந்த சர்க்கரையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சர்க்கரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவாக இருக்கும் அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். சர்க்கரைக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதில் தான் இருவருக்கும் தகறாறு ஏற்ப்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Thirupparangunram ammk admin Murdered By wife


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->