மதுரை உல்லாச ஆசிரியை விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் : பெத்தானியாபுரத்தை சேர்ந்த 45 வயது பெண் ஆசிரியை ஒருவர் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து போலீசார் அநடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை-சிவகங்கை எல்லை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்துவரும் அந்த ஆசிரியை தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்துள்ளார். 

டியூசனுக்கு வந்த மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அவரின் கள்ள காதலன் வீரமணி போட்டோ, வீடியோ எடுத்துவைத்து இருவரும் ரசித்து வந்துள்ளனர்.

போலீசாரிடம் அந்த ஆசிரியை அளித்த வாக்குமூலத்தில், "நான் செல்போன் மூலம் இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்ப்பேன். அதுபோலவே செய்ய  எனக்கு ஆசை ஏற்பட்டது. என்னிடம் டியூசன் படிக்கும் 16, 18 வயது 3 மாணவர்களை மயக்கி அவர்களுடன் தவறு செய்தேன். இதனை வீரமணி விடியோவாக எடுத்து வைத்திருந்தார்.

அந்த வீடியோ வெளியாகியதால் இப்போது நான் சிக்கிக்கொண்டேன்." என்று ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியை அவரின் காதலன் வீரமணியை கைது செய்த போலீசார், இவர்களிடம் சிக்கிய 3 மாணவர்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai lady teacher video case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->