மதுரை: இளம்பெண் குளிப்பதை படம் எடுத்து மிரட்டிய காமுக கொடூரன்..! - Seithipunal
Seithipunal


பெண் குளிப்பதை வீடியோ எடுத்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை சின்னக்கண்ணு நகரை சார்ந்தவர் ரமேஷ். இதே பகுதியில் கனிமொழி என்ற பெண்மணி திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கனிமொழி குளிக்கையில், அதனை காமுகன் ரமேஷ் வீடியோ எடுத்துள்ளார். 

பின்னர் இதனை வைத்து கனிமொழியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேலும், தன்னுடன் ஆசையாக பேசி பழக வேண்டும் என்றும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கொடுமை செய்து வந்துள்ளான். 

இதனால் மனமுடைந்த பெண்மணி, இப்படியே விட்டால் விபரீதமாக பிரச்சனை செல்லும் என்று எண்ணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காமுகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai girl sexual Torture Bath video capturing police arrest culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->