இன்னும் எவ்வுளவு நாள் வேண்டும்?... தமிழக அரசுக்கு மதுரை நீதிமன்றம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் - இளைஞர்களிடையே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை, தனிமை போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளையாடும் இளைஞர்கள் தங்களது பணத்தையும் இழந்து, உயிரையும் விடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறான வழிக்கு நடத்துகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரணை செய்து வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையின் போது, " ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பான விவரத்தை, தமிழக அரசு வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலாக அளிக்க வேண்டும். இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படுமா? விதிகள் வகுக்கப்படுமா?. 

மக்களிடையே பிரபலமான நபர்கள் பலரும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை ஊக்குவித்து வருகின்றனர். இதற்கான சட்டங்கள் இயற்ற எவ்வுளவு காலம் ஆகும்? " என்ற கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், " ஆன்லைன் ரம்மி தொடர்பான விளையாட்டுகளை தடை செய்வதற்கான வரைவு தயார் செய்யப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Court Raise Question to TN Govt about Online Game Rummy Ban


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->