சைக்கிள் கேட்டு ஜி.கே வாசன் தொடந்த வழக்கு.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தொடந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் பரிசளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கில் விசாரணையை வரும் பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madrashc ordered to ec to response TMC cycle symbol case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->