#BREAKING : வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டித் தீர்க்க போகும் கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே கடந்த பத்தாம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 2 நாட்கள் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 19ம் தேதி) முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

low pressure area has formed in the Bay of Bengal Heavy rain tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->