கூடலூர் அருகே லாரி-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கூடலூர் அருகே லாரி-இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூடலூர் இரும்புபாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சுரேஷ்குமார் கூடலூர் சென்றுவிட்டு காலை 11 மணியளவில் இரும்புபாலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry twowheeler accident in gudalur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->