இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - கூலி தொழிலாளி பலி - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராம்குமார் (42). இவர் செம்பட்டிலிருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது வத்தலகுண்டு அருகே, பைபாஸ் சாலையில் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி எதிர்ப்பாராதவிதமாக ராம்குமார் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ராம்குமாரை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry twowheeler accident in Dindigul


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->