லிவிங்க் டூ கேதர் ஜோடி தீக்குளிப்பு.. இளம்பெண் உடல் கருகி பலி.. சென்னையில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜோடி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் (40) என்பவர் இளைச்சி என்ற பெண்னுடன் லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை இருவரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். மேலும், தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

இதில், இளைச்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 60 சதவீத தீக்காயங்களுடன் சந்தீபை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Living together couple burning


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->