சாராயம் கடத்தி வந்த கார்களை மடக்கிய போலீஸ், ஓட்டுநர்கள் எஸ்கேப்!  - Seithipunal
Seithipunal


தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் 2 கார்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர்களுக்கு பொறையார் போலீசார் வலைவீசியுள்ளனர். 
  
தரங்கம்பாடி அருகே பொறையாறு போலீசார் நண்டலாறு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தினர். போலீசாரை கண்ட உடன் கார் ஓட்டுநர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். 

2 கார்களையும் சோதனை செய்ததில் ஒரு காரில் 35அட்டை பெட்டிகளில் 1680 மது பாட்டில்களும் மற்றொரு காரில் புதுச்சேரி மாநில சாராயம் 100 மில்லி பாக்கெட்டு 2150 சாராய பாக்கெட்டுக்கள் சாக்கு மூட்டையில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்து பொறையார் காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liquor from karaikkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->