கட்டிய கணவன் முதல் மனைவியுடன் தொடர்பு., இரண்டாவது மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சஞ்சிலாமணி எனபவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். 

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவரது முதல் மனைவியிடம்  தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது அவரது இரண்டாவது மனைவி சஞ்சலாமணிக்கு தெரியவந்த நிலையில், இவர் தனது கணவரிடம் முதல் மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். 

ஆனால் இதனை கிருஷ்ணமூர்த்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த சஞ்சலாமணி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lady suide in thuiruvathi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->