தென்காசி : குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.! - Seithipunal
Seithipunal


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் மாலையில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.     

குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன் காரணமாக இன்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் பக்தர்கள் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kutralam waterfalls flood picnicers not allowed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->