குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.! - Seithipunal
Seithipunal


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு நீர் நிலைகளில் நீர் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

அதன் காரணமாக, மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஐந்தருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் அதிக வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kutralam waterfalls flood picnicers not allowed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->