மகளின் காதலனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த தந்தை.! கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தனது மகளை காதலித்த காதலனை கத்தியால் குத்தி படுகொலை செய்த தந்தையால் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் அருகே மகளை காதலித்த காதலனை கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்/ இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெல்டிங் பட்டறை வைத்துள்ள தொழிலாளி மணிகண்டன் என்பவருடைய மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு மணிகண்டன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தந்தையின் எதிர்ப்பால் மகள் காதலனிடம் பேசாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பிரபாகரன் தொடர்ந்து மணிகண்டனின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெல்டிங் தொழிலாளி மணிகண்டன், இன்று அதிகாலை பிரபாகரனை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

சம்பவம் அறிந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumbakonam lover murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->