மொட்டை போடும் இடத்திலும் தகராறா.? தொழில் போட்டியில் கத்தரிக்கோளால் குத்திக் கொண்ட சம்பவம்.!
Kovil mottai Fight In Virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் சத்தியமூர்த்தி மற்றும் மாதவன் இருவரும் சலூன் கடை நடத்தி வந்துள்ளனர். அங்கு இருக்கும் மாரியம்மன் கோவில் ஒன்றில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இருவருக்கும் முன்பாக ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் தான்.
15 வருடங்களாக சத்தியமூர்த்தி தான் இந்த பணியை செய்து வந்துள்ளார். இந்த வருடம் திருவிழாவில் மொட்டை அடிப்பதை தான் பார்த்துக் கொள்வதாக மாதவன் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பெரிதாகிய நிலையில் சத்தியமூர்த்தியின் கையில் மாதவன் கத்தரிக்கோலால் குத்தி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்.
மேலும் சத்தியமூர்த்தி மாதவனின் மார்பில் குத்தி இருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகி இருக்கிறது. இந்த தாக்குதலில் மாதவன் படுகாயம் அடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்தியமூர்த்தி அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மாதவனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
Kovil mottai Fight In Virudhunagar