4 நாட்களில் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் பயணம்! தமிழக அரசு தகவல்!
Kilambakkam Bus Stand passengers report
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் 936 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3028 பேருந்துகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது..
கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பேருந்துகளில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.
English Summary
Kilambakkam Bus Stand passengers report