கரூர் மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் வெளியான பெரும் அதிர்ச்சி செய்தி.!
KARUR SCHOOL GIRL SUICIDE ISUUE
கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி ஒருவர் வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தாய் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அந்த சிறுமி இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் sexual harassment ல சாகுற கடைசி பொண்ணு நானா தான் இருக்கனும் என உருக்கமாக எழுதியுள்ளார்.
பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது கரூர் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி சுந்தரவடிவேலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிரிழந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கண்ணதாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு முக்கிய செய்தி.,
English Summary
KARUR SCHOOL GIRL SUICIDE ISUUE