பேரூராட்சி துணைத்தலைவர் தற்கொலை! விசாரணையில் வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


பெருந்துறை அருகே பேரூராட்சி துணைத் தலைவர் சக்தி குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவராக இருந்தவர் சக்திகுமார்.

கடந்த 22ஆம் தேதி விஷம் சக்தி குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், சக்திகுமார் தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது.

இந்நிலையில், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சக்திகுமார் மறைவு செய்தியறிந்து பல்வேறு அரசியல்கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karumandisellipalaiyam sakthikumar suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->