ஆசிரியர் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்! 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

திருநெல்வேலி, பணக்குடி பகுதியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) என்பவர் இந்த கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் உடற்கல்வி ஆசிரியர் ஜெனிகர் பிரபு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கல்லூரி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari student sexual harassment arrested teacher


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->