பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவனை தட்டிக்கேட்டதால் ஆயுதப்படை காவல் அதிகாரி வெட்டிக்கொலை.. நாகர்கோவிலில் பேரதிர்ச்சி.!
Kanyakumari Nagarcoil Police Officer Sree Saravanan Murder 22 June 2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கலைநகர் அம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 32 வயதுடைய ஸ்ரீ சரவணன் என்ற மகன் இருக்கிறார். ஸ்ரீ சரவணன் இதே பகுதியை சார்ந்த சுஜி என்ற 32 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீ வேல் என்ற 11 வயது மகனும், ஸ்ரீதா என்ற 10 வயது மகளும் உள்ளனர்.
ஸ்ரீ சரவணன் கடந்த 10 வருடமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறில் ஆயுதப்படை காவல் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதமாக மருத்துவ விடுப்பு எடுத்து, சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை கடைக்கு சென்று வீடு திரும்புகையில், அப்பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித் (34) என்பவன், ஸ்ரீ சரவணனை இடைமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கைகளில் ஸ்ரீ சரவணனுக்கு வெட்டுக்காயம் ஏற்பட, சுதாரித்துக்கொண்ட அவர் ரஞ்சித்தை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர், தனது நண்பரான விக்ரம் என்பவரின் துணையுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
சிகிச்சை முடிந்து சரவணன் மற்றும் அவரது நண்பர் விக்ரம் வீடு திரும்புகையில், வீட்டருகே வந்த ஸ்ரீ சரவணன் மற்றும் அவரது நண்பரை மீண்டும் இடைமறித்த ரஞ்சித், அவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற விக்ரமுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
கொலைவெறி தாக்குதலை நடத்திய ரஞ்சித் அங்கிருந்து தப்பி செல்லவே, பலத்த காயமடைந்த ஸ்ரீ சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய விக்ரமை மீட்டு தனியார் மருத்துவமனையில் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கோட்டார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ரஞ்சித் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நிலையில், இதனை ஸ்ரீ சரவணன் தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். இதனால் சரணவன் - ரஞ்சித் இடையே முன்விரோதம் ஏற்படவே, சரவணன் மீது ஆத்திரத்தில் இருந்த ரஞ்சித் அவரை கொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், நாகர்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Nagarcoil Police Officer Sree Saravanan Murder 22 June 2021