மினி பேருந்து மெட்டுக்களில் வாழ்க்கையை இழக்கும் இளம்பெண்கள்.. கல்லூரி மாணவியுடன் மல்லுக்கட்டும் ஒரிஜினல் மனைவி.!!
Kanyakumari girls cheated by Mini bus drive police investigation
கன்னியாகுமரி மாவட்டம் கவியக்காவிளை அருகே இருக்கும் கிராமத்தைச் சார்ந்த வாலிபன் பல இளம்பெண்களை ஏமாற்றி வந்த நிலையில், கல்லூரி மாணவியின் வாழ்க்கையை சீரழித்து, முதல் மனைவி கண்ணீர் தர்ணா போராட்டம் செய்வது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியை சார்ந்தவன் மணிகண்டன் என்கிற ரஞ்சித். இவன் மினி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். மினி பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளான்.
மேலும், இவன் களியக்காவிளை பகுதியைச் சார்ந்த சுகந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்துள்ள நிலையில், இவர்களுக்கு 19 வயது மகளும், 17 வயது மகளும் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ரஞ்சித் தனது பெயர்களை மாற்றி, போலி பெயர்களைக் கூறி மினி பேருந்தில் வரும் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக கல்லூரி மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி திருமணம் செய்யாமலேயே அவருடன் குடும்பமும் நடத்தி வந்துள்ளான்.
இதன் காரணமாக மனைவி மற்றும் மகள்களை தவிக்க விட்ட நிலையில், ரஞ்சித்தின் காமுக லீலையில் கல்லூரி மாணவி சிக்கியுள்ளது குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சுகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடுமையான ஆத்திரமடைந்த மனைவி சுகந்தி, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வரும் தனது கணவரை மீட்டு கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று நேரடியாக கல்லூரி மாணவியின் இல்லத்திற்கு சென்று போராட்டம் செய்த நிலையில், கல்லூரி மனைவிக்கும் - ரஞ்சித்தின் மனைவிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், முதல் திருமணம் நடைபெற்று மகள்கள், மனைவி இருக்கும் விஷயத்தை கூறாமல் ஏமாற்றி கல்லூரி மாணவியின் வாழ்க்கையையும் சீரழித்த நிலையில், உன் வயதில் எனக்கு பிள்ளைகள் இருக்கின்றனர், எனது கணவரை என்னுடன் அனுப்பிவிட்டு என்றும் சுகந்தி கூறியுள்ளார்.
இவர்களின் சண்டையினை கண்ட அக்கம்பக்கத்தினர், எல்லைமீறி வாக்குவாதம் சென்று விபரீதம் அரங்கேறிவிடக்கூடாது என்று எண்ணி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணைக்காக இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த காமுகன் ரஞ்சித் தலைமறைவான நிலையில், ரஞ்சித்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திரைப்படங்கள் மற்றும் அதில் வரும் பாட்டுக்கள் பொழுதை போக்கவும், மனதிற்கு அமைதியை தரவும் உதவி செய்யும்.. ஆனால் திரையில் 5 நிமிட பாட்டில் வாழ்க்கை முடிவது போல, நிஜத்தில் அமையாது என்பதே நிதர்சனம்.. அன்போடு பேசுகிறார் என்றால் சகோதரத்துவத்துடன் பழகிவிட்டு, கடந்து சென்றுவிட வேண்டும்.. ஆசையை வளர்த்து, கொடூரனின் உண்மை முகம் தெரியாமல் காதல் செய்தால், பின்வரும் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும் என்பதே எதார்த்தமாக இருக்கும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari girls cheated by Mini bus drive police investigation